பாஜக ஒரு வார்டு கவுன்சிலர் பதவி கூட பெறாது... டி.டி.வி தினகரன் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தை அடுத்த ஆலங்குடியில் அமமுக சார்பில் நேற்று இரவு நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசினார். அந்த கூட்டத்தில் பேசிய அவர் "இந்தி மொழியை திணிக்கும் எந்த கட்சியும் தமிழகத்தில் ஆட்சிக்கு வராது. முதன் முதலில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயன்ற காங்கிரசால் அதன் பிறகு தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியவில்லை. அந்த நிலையை பாஜக நன்கு உணர்ந்து இருக்கிறது.

இது போன்ற விவர விபரீத முடிவுகளை பாஜக எடுக்காது. தமிழகத்தில் இந்திய திணிக்கும் முயற்சியில் பாஜக இறங்கினால் அன்று காங்கிரசுக்கு ஏற்பட்ட அதே நிலைதான் பாஜகவுக்கும் ஏற்படும். தமிழகத்தில் ஒரு வார்டு கவுன்சிலர் கூட வெற்றி பெற முடியாது. தமிழகத்திலிருந்து பாஜக என்ற கட்சி காணாமல் போகும். எடப்பாடி பழனிச்சாமியின் தவறான ஆட்சியால் திமுகவுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. அதே போன்று தேர்தல் நேரத்தில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்ற வில்லை. மத்திய வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் தேர்வாகும் அளவிற்கு தமிழக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் போதெல்லாம் தனக்கு பிடித்த அமைச்சரவை இலக்காக்களை கேட்டுப் பெறுவதை தவிர தமிழர்களுக்காக எதையும் திமுக செய்ததில்லை" என பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran said BJP will not get even one councilor post in TN


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->