அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்.. இன்று மாலையுடன் நிறைவு.!! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடம் நிறைவு பெறுகிறது.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 

நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய  வேட்புமனு தாக்கல், இன்று மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. வேட்புமனு மனுக்கள் 5ஆம் தேதி காலை பரிசீலிக்கப்படும். 6 ஆம் தேதி மாலை 4 மணி வரை மனுவை திரும்பப் பெறலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை நடத்தி, டிசம்பர் 8ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை கைப்பற்றும் முனைப்பில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today admk party election nomination filed last day


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->