தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர்., அதிகாரபூர்வ அறிவிப்பு.!
tn govt announcement may 9
தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர் சண்முகசுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவி ஏற்ற பின்பு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட ஐஐஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர் சண்முகசுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக்காலத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆக பதவி வகித்தவர் ஆவார். இந்நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் தற்போது தமிழக அரசால் நியமிக்கப் பட்டுள்ளார்.
முன்னதாக, இன்று சென்னை மாநகர மாநகராட்சி ஆணையராக ககன்தீப்சிங் பேடி அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் ஐஏஎஸ் தற்போது மாற்றப்பட்டு உள்ளார்.
English Summary
tn govt announcement may 9