உச்சகட்ட மகிழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.! கொண்டாட்டத்தில் அதிமுகவினர்.!
TN CM happy for india today award
சென்னை தலைமைச்செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் பேசியதாவது,
இந்தியா டுடே’ விருதுக்கு தமிழகம் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் என்பது மகிழ்ச்சி தருகிறது. அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் விருது பெற பாடுபட்டவர்களுக்கு நன்றி. அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் பெற்றது ஒட்டுமொத்த முயற்சியாகும்.
நிவர் புயலால் வேலூர், ராணிப்பேட்டையில் அதிக மழை பெய்துள்ளது. நிவர் புயல் காரணமாக ஆந்திராவில் பெய்த மழையால் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நிவர் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிறப்பான நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பாராட்டுகள்.
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை. தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை கணக்கிட்டு இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர உத்தரவிடப்பட்டுள்ளது." என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
English Summary
TN CM happy for india today award