#BigBreaking | தமிழக போலீசாரால் பிரபல ரவுடி சற்றுமுன் என்கவுண்டரில் சுட்டு கொலை.!   - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை போலீஸ் சற்றுமுன்பு சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த துரைமுருகன் மீது 18க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் அவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு என்ற பகுதியில் இந்த என்கவுன்டர் சம்பவம் அரங்கேறி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் ஏழு கொலை வழக்குகள் துரைமுருகன் மீது பதியப்பட்டுள்ளது.

பல்வேறு கொலை குற்ற சம்பவங்களில் தொடர்புடைய துரைமுருகனை போலீசார் இன்று கைது செய்ய சென்றபோது, ராஜ்பிரபு என்ற உதவிக் காவல் ஆய்வாளர் மற்றும் அவருடன் சென்ற இரண்டு காவலர்கள் மீது துரைமுருகன் அரிவாளால் தாக்கி உள்ளார்.

இதனையடுத்து போலீசார் தங்களின் பாதுகாப்புக்காக ரவுடி துரைமுருகனை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thuthukudi rowdy duraimurugan encounter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->