கச்சதீவை மீட்க இதுவே சரியான நேரம்.. தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்.!
This is the right time to restore Kachchadi DMDK Premalatha Vijayakanth
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் போற்றக்கூடிய சாதனைகள் எதுவும் இல்லை. இன்னும் செய்யவேண்டியது நிறைய உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு உள்ளது. அதை யாரும் மறுக்க முடியாது.
மேலும் தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்திற்கு அதிக அளவு கடத்தப்படுகிறது. இதனை தமிழக முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. பாலியல் வன்கொடுமை செயின் பறிப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. ஒன்றிய மாநில அரசுகள் அறிவிப்பு அரசாகவே உள்ளது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் இலவசங்களை தொடர்ந்தால் இலங்கையில் ஏற்பட்ட அதே நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் ஒன்றிய அரசு கச்சத்தீவை மீட்க இதுவே சிறந்த நேரம் அதனை செய்து தமிழக மீனவர்கள் நலனை காக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
This is the right time to restore Kachchadi DMDK Premalatha Vijayakanth