பேருந்துகள் வாங்கவும் வக்கில்லை, இருக்கும் பேருந்துகளை பராமரிக்கவும் துப்பில்லை! அதிமுக தரப்பில் கடும் கண்டனம்!
thenkasi bus accident ADMK DMK
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, மதுரை–தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தின் பின்சக்கரம் திடீரென கழன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்தில் பின்புறம் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் மூவர் காயங்களுடன், இருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
சக்கரம் கழன்ற நிலையில் பேருந்து ஓடியதால் கட்டுப்பாட்டை இழந்து குலுங்கியது. ஆனால் அதே நேரத்தில் பின்னால் வாகனங்கள் வராததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
சக்கரம் கழன்று விழுவதற்கான காரணம் பராமரிப்பு குறைபாடா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அதிமுக நிர்வாகி ராஜ் சத்யன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதில், "மக்கள் உயிரோடு விளையாடும் ஸ்டாலின் மாடல் திமுக அரசு!
பேருந்துகள் வாங்கவும் வக்கில்லை,
இருக்கும் பேருந்துகளை பராமரிக்கவும் துப்பில்லை!
பேருந்து பின்னால் ஏதேனும் வாகனம் வந்திருந்தால் பெரிய விபத்தாகி இருக்கும். இதையெல்லாம் இந்த அரசு எப்போது தான் உணரப் போகிறது?" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
thenkasi bus accident ADMK DMK