தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம் - பலத்த போலீஸ் பாதுகாப்பு.!
tharumapuram pattina piravesam may 22
இன்று மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடைமுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரம் ஆதீனத்தில் இன்று பட்டணப் பிரவேச நிகழ்ச்சி நடத்துவதற்கு கோட்டாட்சியர் ஏற்கனவே தடை விதித்ததால் சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்த தடை உத்தரவை திரும்பப் பெறப்பட்டது.
இதனை அடுத்து பட்டணப் பிரவேச நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று நாற்காலி பல்லக்கில் தருமபுரம் ஆதீனம் உலா வந்தார்.
இந்த நிலையில், முக்கிய நிகழ்ச்சியான பட்டினப்பிரவேசம் இன்று நடைபெற உள்ளது. இதனை ஒட்டி திருமடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே சமயத்தில் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக தர்மபுரம் ஆதீனம் பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
tharumapuram pattina piravesam may 22