அமைச்சர் இல்லத்தில் நடந்த தற்கொலை சம்பவம்.!
telungana minister home suicide case
தெலங்கானா மாநில சாலைகள் மற்றும் கட்டடங்கள் மற்றும் சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் வெமுலா பிரசாந்த் ரெட்டி. வேல்புரில் உள்ள இவருடைய அதிகாரபூர்வ இல்லத்தில் தேவேந்தர் என்ற இளைஞர் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், தேவேந்தர் இன்று அமைச்சரின் இல்லத்தில் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், தேவேந்தர் பெண் ஒருவருடன் நட்பாக பழகிவந்ததும், தற்கொலைக்கு முன் அந்த பெண்ணுக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்ததும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் வீட்டில் வேலை பார்த்து வந்து பணியாளர் ஒருவர் திடீரென்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
telungana minister home suicide case