தெலுங்கானாவில் பரபரப்பு.. பாஜகவின் முக்கிய நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஞானேந்திர பிரசாத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் மியாபூர் நகரில் ஆல்வின் காலனியில் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற தகவல் மியாபூர் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு கிடைத்தது. இதுபற்றி போலீசார் கூறும்போது, தகவல் கிடைத்ததும், தனி படையொன்று சம்பவ பகுதிக்கு சென்றது. 

தெலுங்கானா பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வந்த ஞானேந்திர பிரசாத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். செர்லிங்கம்பள்ளி தொகுதியை சேர்ந்த அவர், கடந்த சில நாட்களாக மிகுந்த மனஉளைச்சலுடன் இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, போலீசார் அவரது உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றுக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று அவர் தனது உதவியாளரிடம் தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறி விட்டு தூங்க சென்றுள்ளார். எனினும், நீண்ட நேரம் அவர் வெளியே வராத நிலையில், ஜன்னல் பகுதியை உடைத்து கொண்டு உதவியாளர் உள்ளே சென்றுள்ளார். அப்போது பிரசாத் தூக்கு போட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அவருக்கு தெரிய வந்துள்ளது. அதன்பின்பு போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telungana bjp executive hanged suicide


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->