#சற்றுமுன்: தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி.!
Tamilnadu Deputy CM O Panneer Selvam Pressmeet Bodinayakkanur 12 March 2021
மீண்டும் தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சியை அதிமுக அமைக்கும் என தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார்.
தமிழக துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக வேட்பாளராக போடி தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்தார். முன்னதாக அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, மக்களிடம் வாக்குகளை சேகரித்தபடி வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது வேட்பாளருக்கான மனுதாக்கல் செய்தார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாலுகா அலுவலகத்திற்கு வருகையில், வழிநெடுகிலும் அவருக்கு மக்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், " தமிழகத்தில் தொலைநோக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதும், எதிர்காலத்திலும் தமிழகம் நலன் பெரும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முறையிலான ஆட்சியை செய்து வருகிறார்.
தமிழக முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு வழங்கியுள்ளார். மீண்டும் தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சியை அதிமுக அமைக்கும் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu Deputy CM O Panneer Selvam Pressmeet Bodinayakkanur 12 March 2021