#Breaking: அவசர ஊர்திக்கு வழிவிட்ட தமிழக முதல்வர்... அமைதி பூங்கா தமிழகம் - முதல்வர் பெருமிதம்.!
Tamilnadu CM Edappadi Palanisamy Give Way to Ambulance in Erode Sathyamangalam
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். இன்று ஈரோடு மாவட்டத்தில் அதிமுக சார்பில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசியவாதவது, " தமிழகத்தில் ஜாதி சண்டை, மதச்சண்டை இல்லை. அமைதி பூங்காவாக தமிழகம் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சிறப்பாக இருக்கிறது. உள்ளாட்சித்துறை, மருத்துவ துறை, நீர் மேலாண்மை என பல துறைகளில் சிறந்து விளங்கியதாக தமிழகம் விருது வாங்கியுள்ளது. திமுகவினர் ஆட்சியில் இல்லாத போதே பல அராஜகத்தை செய்து வந்தனர் " என்று தெரிவித்தார்.
முன்னதாக முதல்வர் பேச துவங்கிய போது அவ்வழியாக அவசர ஊர்தியொன்று வருகைதரவே, அவசர ஊர்தியின் ஒலியை கவனித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைந்து அவசர ஊர்திக்கு வழிவிட கூறி மக்களிடம் தெரிவித்தார். அவசர ஊர்தி வரும் வழியில் இருந்த மக்களும், அவசர ஊர்தி செல்வதற்கு வழியை ஏற்படுத்தி கொடுத்தனர். அவசர ஊர்தி விரைந்து அப்பகுதியை கடந்து சென்றதும் பிரச்சாரம் வழக்கம்போல துவங்கியது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu CM Edappadi Palanisamy Give Way to Ambulance in Erode Sathyamangalam