மேயர் விருப்பமா? நேயர் விருப்பமா? தமிழிசையின் காட்டமான கேள்வி..!! - Seithipunal
Seithipunal


மாண்டஸ் புயல் பாதிப்புகளை காசிமேட்டில் உள்ள துறைமுகத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பார்வையிட வந்த போது அவருடன் அமைச்சர் சேகர்பாபு, கே.என் நேரு, சென்னை நேயர் பிரியா சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் ஆகியோர் உடன் சென்றனர். அப்பொழுது முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் காரில் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் தொங்கியபடி பயணம் செய்தனர். 

அவர்கள் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் மேயர் பிரியா காரில் தொங்கியபடி பயணம் செய்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "சென்னை மாநகராட்சி மேயர் பிரியா காரில் தொங்கியபடி சென்றது மேயரின் விருப்பமா?! நேயரின் விருப்பமா?!" என காட்டமாக பதில் கேள்வி எழுப்பினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisais questioned about mayor priya viral video issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->