தெலுங்கை பூர்வீகமாக கொண்டு தமிழ் வேஷமிடும் தெலுங்கர்களே! திமுகவை ரவுண்டு கட்டிய தமிழிசை! - Seithipunal
Seithipunal


திமுக மற்றும் பாஜக இடையே ஆளுநர் குறித்தான விவகாரம் பெரும் கருத்து மோதலை உண்டாக்கி உள்ளது. ஆளுநர் திரும்ப பெற கோரி திமுக சார்பில் குடியரசுத் தலைவருக்கு மனு அளிக்க திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெறப்பட்டது. இந்த நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் "ஆளுநர்களே எரிமலையோடு விளையாடுகிறீர்கள்" என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. 

முரசொலியில் வெளியான கட்டுரைக்கு புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி தந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்து விட முடியாது. சிலந்தி வேடமிட்டு வரும் மூட்டை பூச்சிகளே.. உங்கள் சாயும் வெளுக்கிறது என்ற பயமா? எனவேதான் எதைக் கண்டாலும் தினம் தினமும் அஞ்சும் தெனாலி திரைப்பட கதாநாயகன் போல் நிழலுக்கும் அஞ்சி அஞ்சி அடிக்கடி ஆளுநர் பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுகிறீர்கள்.

சீரியலிலும் சினிமாவிலும் நடித்துவிட்டு பதவியில் அமர்ந்திருப்பவர்களுக்கு கேமரா மேனியா, மைக் மேனியாவா? இல்லை எங்களுக்கா?. உண்மையை உரக்கச் சொல்லும் எங்களுக்கு கேமரா மேனியாவும் இல்லை, மைக் மேனியாவும் இல்லை. எங்களுக்கு மைக் மேனியா என்பதை விட உங்களுக்கு தான் மோடி போவியா (மோடி பயம்). எனவே இந்த பயத்தில் குளிர் ஜுரம் வந்து அடிக்கடி என்னை பற்றி கட்டுரை வருகிறது.

தெலுங்கானாவில் என்ன நடக்கிறது என்பதை ஒழுங்காக முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்கள். தெலுங்கு பூர்வீகமாகக் கொண்டு வீட்டில் தெலுங்கு பேசி தமிழ் வேடமிடும் தெலுங்கர்களுக்கு, தெலுங்கானாவின் ஆளுநராக இருந்தாலும் தெலுங்கானா சட்டமன்றத்தில் திருக்குறளை தமிழில் ஒலிக்கச் செய்த முழுமையான தமிழ் ரத்தம் ஓடும் தமிழச்சி நான் என்பதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. 

என்னை யார் தமிழகத்தில் கருத்து கூற முடியாது என்று சொல்வது... யார் அந்நியர் நீங்களா? நானா? கடந்த மூன்று ஆண்டுகளில் வெளியான தெலுங்கானா உள்ளூர் பத்திரிக்கை செய்திகளை ஆராய்ச்சி செய்து பார்த்தால் யார் நடுங்கி போயிருக்கிறார்கள் என்பது தெரியும். மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்காக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதை அங்கே உள்ள முக்கிய பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளாகவும் முக்கிய செய்திகளாகவும் அன்று மாலையே தொலைக்காட்சிகளில் விவாத பொருளாகவும் அவ்வப்போது நடந்து வருகிறது.

எனக்கு பதில் சொல்ல ஆட்சியாளர்களும் குடும்ப வாரிசுகளும் அமைச்சர்களும் கங்கணம் கட்டி நிற்பதே அதற்கு சாட்சி.. அங்கே மக்களுக்காக ஆட்சியாளர்களை திணறடிக்கும் என்னை கை பிசைந்து நிற்பதாக கனவு காண்கிறீர்கள். ஆளுநருக்குரிய மரியாதையை தர தவறியதின் விளைவு கண்டு தான் உங்கள் பரமானந்தம் என்றால் அது மாதிரியான அற்ப சந்தோஷம் தான் உங்களுக்கு கிட்டும். இதன் மூலம் உலக தமிழர்களுக்கு காப்பரிமை வாங்கிக் கொண்டதாக தம்பட்டம் கட்டி வீர வசனம் பேசிய உங்கள் சாயம் வெளுக்கிறது. அங்கே பண்ணை வீட்டில் நடக்கும் வாரிசு அரசியல் ஆட்சியை மக்கள் முன் தோலுரித்துக் காட்டியதால் ஆளுநர் மாளிகை மீது கோபம். 

தெலுங்கானாவில் மூன்று நாள் பாண்டிச்சேரியில் மூன்று நாள் என்று நேரம் ஒதுக்கி வழியில் தமிழ்நாட்டிலும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பணியாற்றும் என்னை குறை காண வேண்டாம். நான் பொதுவெளியில் வைக்கும் வாதங்களுக்கு பதில் விளக்கம் சொல்ல தெம்பும் திராணியும் அற்றவர்கள் தான் என்னைப் பற்றி கட்டுரை எழுதுகிறார்கள். தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி அண்டை மாநிலத்தில் மக்கள் பணியாற்றும் நான் கருத்து கூறினால் அதை எதிர்த்து கட்டுரை எழுதுவது தான் உங்கள் கருத்து சுதந்திரமா? 

நீங்கள் எரிமலைகள் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்ய முடியாது. குருவி தலையில் பனம்பழம் என்று கேட்டிருக்கிறீர்கள். இலவச பனங்காய்களை தலையில் சூட்டிக் கொள்ளும் வாரிசு குருவி அல்ல நாங்கள்.. பனை விதிகளாய் மண்ணில் புதைந்து தானே வளர்ந்து உருகேறிய பனை மரங்கள் நாங்கள். முரசொலியின் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். இடி ஒலியே எங்களை ஒன்னும் செய்ய முடியாதபோது முரசொலி எங்களை என்ன செய்து விட முடியும். 

வதந்திகளை பரப்பும் சிலந்திகள் நசுக்கப்படலாம். உண்மைக்காக உழைக்கும் சிங்கங்களை ஒன்றும் செய்ய முடியாது. சிலந்திகள் சிங்கங்களை என்ன செய்துவிட முடியும்" என முரசொலி கட்டுரைக்கு காட்டமா பதிலடி தந்துள்ளார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisai responded to DMK Murasoli editorial


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->