தமிழகம் திரும்பும் ஓபிஎஸ்ஸுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! முடிவுக்கு வந்த குழப்பம்.!  - Seithipunal
Seithipunal


அமமுகவில் இருந்து விலகிய நாங்கள் அமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் வந்த பின்னர் அதிமுகவில் இணையப் போகிறோம்  என அமமுக புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அமமுகவில் இருந்து விலகி உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவிலிருந்து பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறோம். அதிமுகவனது விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்றதைப் போல அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறும்.

அமமுக கட்சி நிர்வாகிகள் பல நலத்திட்ட உதவிகளை கஜா புயலுக்கு செய்தோம். ஆனால் பல ஆயிரம் கோடி சொத்து சேர்த்து வைத்துள்ள தினகரன் சொந்த செலவில் எதுவும் செய்யவில்லை. தன்னுடைய கம்பெனி ஒன்றை புறம்போக்கு இடத்தில் நடத்தி வருகின்றார்.

அமமுக தொடங்கிய காலத்திலிருந்தே நான் கட்சியில் இருந்து வருகிறேன். தினகரனால் எந்த கட்சியையும் நடத்தமுடியாது. கொள்ளையடித்த பணத்தில் கஜா புயலுக்கு ஏதாவது உதவி செய்திருக்கலாம். 20 ரூபாய் காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி செல்கிறார். நாங்கள் அதிமுகவிற்கு செல்வது சசிகலாவிற்கு தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.

அமமுகவின் மீது அதிருப்தியில் இருந்த புகழேந்தி எந்த கட்சியில் இணைவார் என்றும், திமுகவில் இணைய போகிறார் என்றும் சில தகவல்கள் பரவி வந்த நிலையில், அனைத்து குழப்பத்திற்கும் முற்று புள்ளி வைத்து விட்டார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

surprise for o paneerselvam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->