வக்கற்ற தமிழக காவல்துறை! திமுகவிற்கு இந்த சட்டம் பொருந்துமா! ஷ்யாம் கிருஷ்ணசாமி! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து தென் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே சென்னை கோவை உள்ளிட்ட பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதே போன்று தென் மாவட்டங்களில் நவம்பர் 2 - விருதுநகர், நவம்பர் 3 - தென்காசி, நவம்பர் 4 - திருநெல்வேலி, நவம்பர் 5- தூத்துக்குடி மாவட்டங்களில் போராட்டம் நடத்துவதற்காக புதிய தமிழகம் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதற்கான அனுமதியை புதிய தமிழகம் கட்சியினர் காவல்துறையிடம் பெற்றிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை வழியாக விருதுநகர் சென்று கொண்டிருக்கும் பொழுது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாலை விதிகளை மீறி பயணம் செய்ததாக கூறி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் தென் மாவட்டங்களில் பதட்டமான சூழல் உண்டாகியுள்ளது.

டாக்டர் கிருஷ்ணசாமியின் கைது கண்டித்து அவருடைய மகன் ஷியாம் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் "வீட்டிலேயே குண்டு தயாரிக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க வக்கற்ற தமிழக காவல்துறை, முன் அனுமதி பெற்ற போராட்டத்திற்கு ஒரு கட்சியின் தலைவர் நான்கு வாகனங்களுக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லாமல் தடுப்பது தான் வேலையா? திமுகவிற்கு இந்த சட்டம் பொறுந்துமா? என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shyam Krishnaswamy said Tamil Nadu police are ruthless


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->