செந்தில் பாலாஜியின் காவல் 23வது முறையாக நீட்டிப்பு.!!
Senthilbalaji judicial custody extended 23rd time
அமலாக்க துறையால் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவருடைய நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீது அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது அடுத்து மார்ச் 6ஆம் தேதிக்கு ஒத்தி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணைக்கு வந்த போது அவருடைய நீதி மன்ற காவலை மார்ச் 6ஆம் தேதி வரை 23 வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Senthilbalaji judicial custody extended 23rd time