செந்தில் பாலாஜியின் காவல் 24வது முறையாக நீட்டிப்பு
Senthil balaji judicial custody extended 24th time
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீதான வழக்கு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதி மன்ற காவலை மார்ச் 11ம் தேதி வரை 24வது முறையாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Senthil balaji judicial custody extended 24th time