இதைப்பற்றி எல்லாம் மக்களுக்கு எந்த விதமான கவலையும் இல்லை.! குற்றம் சாட்டிய செல்லூர் ராஜு.!
sellur raju pressmeet
அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ "ஏழைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ப.சிதம்பரம் மேல்மட்ட அரசியல்வாதிகளின் பிரதிதியாக செயல்பட்டவர்." என குற்றம் சாட்டி இருக்கின்றார்.
தற்பொழுது மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள முத்துப்பட்டியில் சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனை பாரவியிட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வந்தார்.
பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கட்டப்படுவது உறுதி என்றும், மருத்துவமனை விவகாரத்தில் எந்த தடையும் இருக்காது என்றும் உறுதிபட கூறினார்.
மேலும், ஏழைகளைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், மேல்மட்ட அரசியல்வாதிகளின் பிரதிநிதியாக மட்டுமே செயல்பட்டவர் சிதம்பரம் என்றும் குற்றம் சாட்டினார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
இதன் காரணமாக சிதம்பரம் கைது மக்களுக்கு எந்த விதமான வருத்தமும் அளிக்கவில்லை. மாறாக கொண்டாட்டத்தை தான் அளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.