நா.த.கவுக்கு புதிய சிக்கல்.. அவசர கதவை திறக்குமா உச்சநீதிமன்றம்? இன்று முறையீடு.!! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம்  சீமானின் கோரிக்கையை நிராகரித்ததோடு அவருடைய மனுவை தள்ளுபடி செய்தது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதற்கிடையே நேற்று மக்களவை பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சீமான் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

அதன்படி இன்று அல்லது நாளை விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 20ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளதால் அத்தனை மேற்கோள் காட்டி அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்க உள்ளதாகவும், வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு விரைந்து விசாரிக்க வலியுறுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman urges to sc farmer symbol appeal case pending


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->