நா.த.க தான் பெரிய கட்சி‌... சின்னம் இல்லாமலும்..!! சீமானின் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் "கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவருக்கு கேட்காமலேயே கரும்பு விவசாய சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கரும்பு விவசாய சின்னம் மறுக்கப்பட்டது திட்டமிட்ட செயல். டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் என்ன முடிவு வந்தாலும் உச்ச நீதிமன்றம் செல்வேன். தமிழகத்தில் திமுக அதிமுகவுக்கு பிறகு நாம் தமிழர் கட்சி தான் மிகப்பெரிய கட்சியாக உள்ளது. முன்னுரிமை அடிப்படையில் கரும்பு விவசாய சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு தான் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பரிந்துரை செய்வதாக கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கவில்லை என்றாலும் நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman Said NTK contest without symbol


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->