நா.த.க வேட்பாளர்கள் யார்.? மொத்தமாக ஒரே மேடையில்... வெளியானது முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உரைமேடையில் அறிமுகப்படுத்தப் போவதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.‌

நாம் தமிழர் கட்சியின் சின்னம் கர்நாடகவைச் சேர்ந்த வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்த உள்ளார். 

இது தொடர்பாக சீமான் நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "எதிர்வரும் ஏப்ரல் 19 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டமானது தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் சென்னையில் பேரழிச்சியாக நடைபெறவிருக்கின்றது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் சென்னை பல்லாவரம் துரைப்பாக்கம் சாலையில் சீமான் தலைமையில் வரும் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman introduced 40 loksabha candidates on Saturday


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->