இந்துக்களை திருநீறு பூசியே ஏமாற்றி விடுவோம்.. திமுகவின் பலே திட்டம்.. கொந்தளிக்கும் மக்கள்.!!
sattur ramachandran says hindu
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் நடத்திய போராட்டத்தில் ராமரின் உருவப்படத்தை செருப்பால் அடித்ததாக நடிகர் ரஜினி துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில் கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக ரஜினி கூறியதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் ஆதரவுகளும் வருகின்றனர்.
அப்படி நடக்கவில்லை என திராவிட கழகத்தினர் தங்கள் பக்கம் உள்ள ஆதாரங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து ரஜினி ரசிகர்களும் ரஜினி கூறியதற்கு ஆதாரங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம் என திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள இந்துக்களை விட சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு தான் மோடியை விரட்ட பொறுப்பு அதிகம் உள்ளது.
நாங்கள் திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம். மோடியை விரட்ட எப்படி தான் வேஷம் அணிந்து செயல்படவேண்டும். சிறுபான்மை இன மக்களிடம், இந்துக்கள் ஏமாந்து விடுவார்கள் என சாத்தூர் ராமச்சந்திரன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
sattur ramachandran says hindu