கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்துக்கள்.. சசிகலா.!! - Seithipunal
Seithipunal


கருணையே வடிவான, கர்த்தராகிய இயேசுபிரான்‌ அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும்‌ கிறிஸ்தவப்‌ பெருமக்கள்‌ அனைவருக்கும்‌ எனது இதயம்‌கனிந்த கிறிஸ்துமஸ்‌ இன நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌ என சசிகலா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உங்கள்‌ சத்துருக்களைச்‌ சிநேடயுங்கள்‌, உங்களைப்‌ பகைக்‌கிறவர்களுக்கு நன்மைசெய்யங்கள்‌,
உங்களைச்‌ சபிக்‌கிறவர்களை ஆசிர்வகியுங்கள்‌ என்ற இயேசுபிரான்‌ அவர்களின்‌ போதனைக்கு ஏற்ப, நாம்‌ ஒவ்வொருவரும்‌ செயல்பட்டால்‌ நம்‌
வாழ்வில்‌ வெற்றி நிச்சயம்‌.

"இன்னறுறும்‌ மனிதர்களுக்கு நீங்கள்‌ செய்‌௫இன்ற உதவியெல்லாம்‌ ஆண்டவனுக்கு செய்யும்‌ உதவியாகும்‌'' என்ற இயேசு பெருமானின்‌ அறிவுரைக்கு ஏற்ப, மழை வெள்ளத்தால்‌ பாதுப்படைத்தோருக்கும்‌, கொரோனா என்ற கொடிய நோயால்‌ உறவுகளை இழந்து கவிப்போருக்கும்‌ நம்மால்‌ இயன்ற உதவிகளை செய்து, இத்திருநாளில்‌ ஆண்டவனின்‌ அருளை பெறுவோம்‌.

நம்‌ புரட்சித்தலைவி அம்மா அவர்கள்‌ தான்‌, இந்தியாவிலேயே முதல்‌ முறையாக தமிழகத்தைச்‌ சேர்ந்த ஏழை எளிய இறிஸ்தவப்‌ பெருமக்கள்‌ ஜெருசலேம்‌ புனிதப்‌ பயணம்‌ மேற்கொள்ள நிதியுதவி அளிக்கும்‌ ஏறப்புத்‌ இட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்‌ என்பதை இந்நன்னாளில்‌ நிலைத்து பார்க்கும்போது பெருமூழ்ச்சி அடைகிறேன்‌.

எல்லோரிடமும்‌ அன்பைப்‌ பொழிந்து, கருணையின்‌ வடிவமாய்‌ விளங்கிய இயேசுபிரான்‌ பிறந்த இத்இருநாளில்‌, அவர்‌ போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள்‌ அனைவரும்‌ பின்பற்றி சகோதரத்துவத்துடன்‌ ஒற்றுமையாக வாழ வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொண்டு, கிறிஸ்தவப்‌ பெருமக்கள்‌ அனைவருக்கும்‌ மீண்டும்‌ ஒரு முறை எனது உளம்‌ கனிந்த கிறிஸ்துமஸ்‌ இன நல்வாழ்த்துகளை தெரிவித்துக்‌ கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sasikala wish for christmac


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->