வீர் சக்ரா விருது பெற்ற அபிநந்தனுக்கு சசிகலா வாழ்த்து.!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது நேற்று வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை வழங்கினார். இதையடுத்து, வீர் சக்ரா விருது பெற்ற அபிநந்தனுக்கு தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், வீர் சக்ரா விருது பெற்ற அபிநந்தனுக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீர்‌ சக்ரா விருது” பெற்ற திரு.அபிநந்தன்‌ வர்த்தமான்‌ அவர்களுக்கு வாழ்த்துக்கள்‌.

கடந்த 2019 ஆம்‌ ஆண்டு பாகிஸ்தானின்‌ போர்‌ விமானத்தை சுட்டு வீழ்த்தி தாய்‌ நாட்டைக்‌ காப்பாற்றி, பெருமை சேர்த்தவர்‌ திரு.அபிநந்தன்‌ வர்த்தமான்‌ அவர்கள்‌. இதற்காக அப்பொழுதே, இந்திய ராணுவத்தால்‌ கெளரவிக்கப்படும்‌ மூன்றாவது உயரிய விருதான “வீர்‌ சக்ரா விருது” திரு. அபிநந்தன்‌ அவர்களுக்கு அறிலிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்பொழுது, நமது குடியரசுத்‌ தலைவர்‌ அவர்களால்‌, திரு.அபிநந்தன்‌ அவர்களுக்கு “வீர்‌ சக்ரா விருது” வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக, தமிழ்‌ மண்ணின்‌ தவப்புதல்வன்‌, அபிநந்தன்‌ வர்த்தமான்‌ அவர்களுக்கு, என்‌ உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்‌ கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sasikala wish for abhinandan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->