சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.. உற்சாகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.!
sasikala case dismissed
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களால் அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது. பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு தினகரன் தலைமையிலும், ஓபிஎஸ் தலைமையிலும் அணிகள் செயல்பட்டன.
அப்போது திடிரென தினகரன் அணியில் இருந்து பிரிந்த இபிஎஸ் அணியினர் ஓபிஎஸ் அணியினருடன் இணைந்தனர். இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் ஆவணங்கள் தாக்கல் செய்தன. பின்னர் ஓபிஎஸ், மதுசூதனன் தலைமையிலான அணிக்கு கட்சியும், சின்னத்தையும் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன், சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா, தினகரன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த தினகரன் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.