தாடி வைத்த மோடி பிரதமராக இருக்கும் போது, தாடி வைத்த நான் ஏன் முதல்வராக கூடாது! சரத்குமார் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


இன்று தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சியின் தென்மண்டல மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் மற்றும் அந்தக் கட்சியின் மாநில மகளிரணி செயலாளரும், நடிகையுமான ராதிகா சரத்குமார் வந்தனர். தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில், சரத்குமார் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அவர் அப்போது கூறியவை, 

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் ராதிகா போட்டியிடுவது குறித்து உயர்மட்ட குழு முடிவு செய்யும். கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் நிற்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. யார், எங்கு வேண்டுமானாலும் நிற்கும் உரிமை உள்ளது. கருத்துக் கணிப்பு பற்றி தற்போது கூறுவது, முன்கூட்டியே கூறுவது போல் இருக்கும். டிஜிட்டல் மீடியாவில் அதிகமாக கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. மக்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும். யார் நல்லது செய்கிறார்களோ அவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பது நல்லது. 

மேலும், நீங்கள் ஏன் தாடி வைத்து இருக்கிறீர் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மோடியே தாடி வைக்கும் போது நான் ஏன் தாடி வைக்க கூடாது? தாடி வைத்த அவர் பிரதமரா இருக்கும்போது, நான் ஏன் முதல்வராக கூடாது என்று கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sarathkumar press meet in modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->