எம்ஜிஆர் இன்று உயிரோடு இருந்தா, அதிமுகவை ஸ்டாலினிடம் ஒப்படைத்து இருப்பார் - அதிரவைத்த ஆர்.எஸ்.பி!
RS Bharathi Say about ADMK MGR Stalin
திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் என்று களம் இறங்கி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஈரோடு கிழக்கு சூரம்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், "அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த நாவலரின் நூற்றாண்டு விழாவிற்கு அக்கட்சியினர் எதுவும் செய்யவில்லை. அவருக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் தான் சிலை வைத்தார்.
இன்று எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தால், தனக்கு ஸ்டாலின் தான் மரியாதை கொடுப்பார் என்று நினைத்து, அதிமுகவை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பார்" என்று ஆர்எஸ் பாரதி பேசினார்.
முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவிக்கையில், "மக்கள் அளிக்கும் ஆதரவை காணும்போது இளங்கோவன் வெற்றி உறுதியாகி இருப்பதை உணர முடிகிறது. அவரின் வெற்றி வெற்றி என்பது நிச்சயக்கப்பட்ட ஒரு வெற்றி" என்று அமைச்சர் பெரிய கருப்பன் நம்பிக்கை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி ஒரு மணி மகுடமாக இருக்கும்" என்றார்.
"கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை" என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
RS Bharathi Say about ADMK MGR Stalin