ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் செய்த செயல்.. அதிர்ச்சியில் அதிமுகவினர்!!
raveendranath kumar release opr app
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. போட்டியிட்ட மற்ற தொகுதியில் அதிமுக தோல்வியை சந்தித்தது. தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தேனி மக்களவை தொகுதி மக்கள் கோரிக்கைகள், தேவைகள், தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை உடனுக்குடன் தெரிவிக்க, ரவீந்திரநாத்குமார், 'OPR உங்களுடன் நான்' என்ற புதிய செயலியை தொகுதி மக்களுக்காக அறிமுகம் செய்துள்ளார்.
தற்போது இந்த செயலியை அறிமுகம் செய்து இருப்பது அந்த தொகுதி மக்கள் வரவேற்பதாக கூறப்படுகிறது. மேலும், ரவீந்திரந்த்குமாரின் செயலை பார்த்து அதிமுக கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகி பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.
இதற்கு முன்பு திமுகவின் பொருளாளர் துரைமுருகன் தேனி சென்ற போதும் அவரை விருந்துக்கு அழைத்து, அதிமுகவினரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
English Summary
raveendranath kumar release opr app