ஹவாய் தீவில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டின் பயணத்தின் ஒரு பகுதியாக ஹவாய் தீவிற்கு சென்று உள்ள இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், அங்குள்ள படைத்தளங்கள் மற்றும் ராணுவ பயிற்சி மையங்களை பார்வையிட்டார்.

ஹவாயில் போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்ற ராஜ்நாத் சிங், அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

பசுபிக் மண்டலத்திற்கான அமெரிக்க ராணுவத் தளத்திற்கு சென்று பார்வையிட்ட அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள், மேலும் அங்கிருந்த பயிற்சி மையங்களையும் பார்வையிட்டார்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவ உறவுகள் அண்மைக்காலமாக வலுப்பெற்று வருவதாக ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajnath singh Visited various training sites of USARPAC


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->