ஏழைகள் கேள்வி கேட்பது, முன்னேறுவது, சமமாக நிற்பதை பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., விரும்புவதில்லை: அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ள ராகுல்..!
Rahul says BJP and RSS dont want the poor to ask questions progress and stand on equal footing
நம் நாட்டில் ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் சூழல் விரைவில் உருவாகும் என்றும், அப்படியான சமூகத்தின் உருவாக்கம் வெகுதொலைவில் இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்-ஷா நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறினார்.
அத்துடன், மொழிகளை நம் கலாசாரத்தின் மீதான ஆபரணங்களாக கருதுகிறேன் என்றும், நம் மொழிகள் இன்றி, நாம் உண்மையான இந்தியராக இருக்க முடியாது; தாய் மொழியே, நம் நாட்டின் அடையாளம் எனத் மேலும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலடியாக ''ஏழைகள் கேள்வி கேட்பதையும், முன்னேறுவதையும், சமமாக நிற்பதையும் பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., விரும்பவில்லை,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆங்கிலம் தடையல்ல, அது அனைவரையும் இணைக்கும் பாலம். ஆங்கிலம் என்பது அவமானம் அல்ல. அனைவருக்கும் அதிகாரம் அளிப்பது. ஆங்கிலம் என்பது சங்கிலி அல்ல. சங்கிலியை உடைக்கும் கருவி. என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஏழைகள் கேள்வி கேட்பதையும், முன்னேறுவதையும், சமமாக நிற்பதையும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்., விரும்பவில்லை எனவும், ஏழைகள் ஆங்கிலம் கற்பதை அவர்கள் விரும்பவில்லை. இன்றைய உலகில், உங்கள் தாய்மொழியை போல் ஆங்கிலம் பேசுவதும் அத்தியாவசியம். அதன் மூலமே வேலை உறுதி செய்யப்படும். நம்பிக்கை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு இந்திய மொழிக்கும் ஆன்மா, கலாசாரம் மற்றும் அறிவு உள்ளது. அவற்றை நாம் போற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர்கள் உலகத்துடன் போட்டி போடவும், அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைப்பற்கான இந்தியாவை உருவாக்க இதுவே பாதை. என்று அவருடைய அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Rahul says BJP and RSS dont want the poor to ask questions progress and stand on equal footing