ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால் அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்  ஆ.ராசாவை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி இன்று ஹெலிகாப்டர் மூலம் வந்தார். 

அப்போது அங்கிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து சுமார் 10 நிமிடம் நடைபெற்ற சோதனையில் பணமோ பொருளோ எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi helicopter Army officers arrived 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->