ஓபிஎஸ் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் - அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி ! - Seithipunal
Seithipunal


ஓபிஎஸ் ஒரு காலாவதியான மருந்து, அவரால் மக்களுக்கு ஒரு பயனுமில்லை என்று,  முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம்-டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவதாக செயல்பட உள்ளதாக நேற்று அறிவித்திருந்த நிலையில், இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் எம்எல்ஏ இன்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆர்பி உதயகுமார் எம்எல்ஏ இன்று தெரிவித்தாவது, "ஓபிஎஸ்-டிடிவி தினகரனின் சந்தர்ப்பவாத சந்திப்பை நாம் பொருட்படுத்த தேவையில்லை. 

தன்னுடைய அடையாளத்தை தொலைத்து விடக்கூடாது என்பதற்காக யாரை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினாரோ, தற்போது அவர்களுடனே இணைந்துள்ளார்.

மக்கள், தொண்டனிடம் ஓபிஎஸ்-தினகரன் சந்திப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. தனக்குப் பதவி இல்லை என்று கூறினால் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றக்கூடியவர் ஓ பன்னீர்செல்வம்.

தன்னுடைய குடும்ப நலனுக்காக மட்டுமே ஓ பன்னீர்செல்வம் யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சந்திப்பார். 

ஓ பன்னீர்செல்வம் ஒரு காலாவதியான மருந்து, அவரால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை" என்று ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

R P Udhayakumar Say About OPS TTV joint


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->