தினகரன் அமமுகவை விட்டு போனாலும், புகழேந்தி போகமாட்டார்.! ஏன் தெரியுமா.?!
pugazhenthi ammk
தினகரன் மீது சசிகலா அதிருப்தியில் இருக்கும் சசிகலா வெளியே வரும் வரை புகழேந்தி கட்சியை விட்டு போகமாட்டார் என கூறப்படுகிறது.
சசிகலாவிற்கும், தினகரனுக்கும் வலதுகரமாக இருந்தவர் புகழேந்தி. அந்த கட்சியில் இருந்து அவர் வெளியேற போகின்றார் என்ற தகவல்கள் தற்போது வந்து கொண்டிருக்கின்றது. மேலும் சசிகலாவிற்கு தினகரனின் சமீபகால நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதுபோல புகழேந்தியை கட்சியை விட்டு அனுப்புவதற்கு சசிகலாவிற்கு சற்றும் விருப்பமில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக சசிகலா வெளியே வரும்வரை புகழேந்தி வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டார் என அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மேலும், சிலர் புகழேந்தி, தினகரனுக்கும் இடையே முன்புபோல் நட்புறவு இல்லை. அதனால் கட்சியிலிருந்து வெளியேற அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றது என கூறுகின்றனர். ஒருவேளை புகழேந்தி கட்சியை விட்டு வெளியேறினால், அவர் செல்ல இருக்கும் கட்சி மாநில கட்சியாக இருக்காது நிச்சயம் தேசிய கட்சியாக தான் இருக்கும். என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.