டிடிவிக்கு 20 ரூபாய் டோக்கன் பிளான் கொடுத்தது திமுகவை சேர்ந்த முக்கிய நபர் தான்..! பேட்டியில் போட்டுடைத்த பகீர்..!  - Seithipunal
Seithipunal


முன்னதை நடைபெற்ற ஆர்.கே நகர் தேர்தலில், ஓட்டு ஒன்றுக்கு 20 ரூபாய் டோக்கனை வாக்காளர்களுக்கு வழங்கினார்கள். இந்த யோசனையை, டிடிவி தினகரனுக்கு திமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜிதான் கூறியிருக்கிறார் என்று அதிமுக தலைமை கழக பேச்சாளர் புகழேந்தி கூறியிருக்கிறார். 

நடைபெற்ற நாடளுமன்ற தேர்தலுக்கு பின் டிடிவி கட்சியில் இருந்து பல முக்கிய தலைவர்களும் வெளியேறி அதிமுக மற்றும் திமுக கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். இதை தொடர்ந்து, அமமுக கட்சியில் தினகரனின் நம்பிக்கையாக இருந்தவர் புகழேந்தி கட்சியில் இருந்து விளங்கி சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். 

Image result for senthil balaji seithipunal

இந்நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி, அதிமுக சார்பில், நடைபெற்ற கொள்கை விளக்க  பொதுகூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் புகழேந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். 

அப்போது, கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய புகழேந்தி, தன்னை தேர்ந்தெடுத்த ஆர்.கே நகர் மக்களுக்கு டிடிவி தினகரன் இதுவரை என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ஆர்.கே நகரில் ஓட்டுக்கு 20 ரூபாய் டோக்கன் யோசனையை டிடிவி தினகரனுக்கு கூறியது, தற்போது திமுகவின் செந்தில் பாலாஜிதான் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் ஆர்.கே நகர் தேர்தலின்போது புகழேந்தி டிடிவி தினகரனுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pugalenthi talk about ttv dinakaran


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->