முதல் முறையாக இரண்டாக பிரியும் அதிமுக.! ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் முதல் முறையாக அதிமுக இரண்டாகப் பிரிக்கப்பட்டு கிழக்கு மாநிலச் செயலாளராக அன்பழகன் எம்எல்ஏவும், மேற்கு மாநிலச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கீழ் உப்பளம், காமராஜர் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், திருபுவனை, பாகூர், ஏனாம் உள்ளிட்ட 13 தொகுதிகளை கிழக்கு மாநிலம் என்று பிரித்து, இதற்கு செயலாளராக எம்எல்ஏ அன்பழகன் நியமிக்கப்படுகிறார்.

நெல்லித்தோப்பு, மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், ஊசுடு, மங்கலம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி, உருளையன்பேட்டை, மாஹே உள்ளிட்ட 12 தொகுதிகளை மேற்கு மாநிலம் என்று பிரித்து, இதற்கு செயலாளராக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் நியமிக்கப்படுகிறார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puducherry AIADMK announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->