"ஒத்த விரல வச்சி எல்லாரையும் அடிச்சிடுவாரா?" - ஈபிஎஸ் மீது பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு.!!
Ponmudi radhakrishnan criticized aiadmk EPS election campaign
அதிமுக சார்பில் எதிர்வரும் மக்களவைப் பொதுத்தேர்தலுக்காக ஒற்றை விரலால் ஓங்கி எடுப்போம் என்ற தேர்தல் பிரச்சார யுத்தியை கையில் எடுத்துள்ளது. மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள இந்த தேர்தல் பிரச்சாரம் குறித்து பாஜக மூத்த தலைவரும் கன்னியாகுமரி வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தனது விமர்சனத்தை முன் வைத்துள்ள பொன் ராதாகிருஷ்ணன் "அப்படி என்றால் மொத்தம் அவருக்கு நான்கு விரல்கள் காணாமல் போயிருக்கிறது என்று அர்த்தம். தனித்து விடப்பட்ட ஒரு கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் ஒற்றை விரலை வைத்து எல்லாரையும் அடித்து விடுவோம் என சொல்பவர் குறித்து வேறு என்ன கூற முடியும்" என தனது கடுமையாக தப்பி பேசியுள்ளார்.
English Summary
Ponmudi radhakrishnan criticized aiadmk EPS election campaign