வெறிசோடியது சென்னை! இதுவரை சென்னையில் இருந்து பேருந்துகளில் வெளியூர் சென்ற பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!!
PONGAL SPL BUS DETAILS
பொங்கல் தினத்தையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல எதுவாக மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு, கே.கே.நகர் ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11-ம் தேதி முதல் இன்று பகல் 1 மணி வரை சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 11,659 சிறப்பு பேருந்துகளில் 6.01 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
எந்தெந்த ஊருக்கு எந்தெந்த பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்ற விவரம் பின்வருமாறு:
மாதவரம் புதிய பேருந்து நிலையம் : ஆந்திரா மார்க்கம் செல்லும் அனைத்து பேருந்துகள் இயக்கப்படும்.
கே.கே.நகர் பேருந்து நிலையம் : ஈசிஆர் மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
தாம்பரம் சானிடோரியம் : விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
தாம்பரம் ரயில் நிலையம் : திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
பூவிருந்தவல்லி( பூந்தமல்லி): வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.
பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து முன்பதிவு செய்த பயணிகள், ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து பயணம் மேற்கொள்ள வேண்டும்.