கட்சி வேஷ்டி கட்டாம, கூட்டத்துக்கு வந்தா ஆயிரம்.! பிரபல கட்சியில் புதிய அறிவிப்பு.!
political party new announcement for members
கட்சி வேட்டி கட்டாமல் தேமுதிக கூட்டங்களுக்கு வந்தால், ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டு இருக்கின்றதாம்.
தொடர்ந்து அரசியலில் தேமுதிக சரிவை சந்தித்து வரும் நிலையில், கட்சியின் நிர்வாகிகள் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது, தேர்தல் கூட்டணி குறித்து சரியான முடிவு எடுக்கவில்லை என பல விஷயங்களில் தேமுதிகவினர் அதிருப்தியில் இருக்கின்றனர்,
இந்த நிலையில் நேற்று தேமுதிக கட்சியின் அலுவலகத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் குறித்த நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்திற்கு வந்த பெரும்பாலான நிர்வாகிகள் கட்சி வேஷ்டியுடன் வரவில்லையாம்.
இதன் காரணமாக கடுப்பான முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் இனிமேல் தேமுதிக நிகழ்ச்சிகளுக்கு கட்சி வேஷ்டி இல்லாமல் யார் வந்தாலும் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளார்.
தலைமை ஒப்புதல் பெற்று தான் இதைக் கூறினாரா அல்லது தானாகவே இதைக் கூறி இருக்கின்றாரா என தெரியாத நிலையில் இந்த உத்தரவின் காரணமாக கட்சியினர் அதிருப்தியில் இருக்கின்றனர்.
English Summary
political party new announcement for members