தமிழக காவல்துறையினர் செய்யும் அதிகார துஷ்பிரயோகங்களை தமிழக அரசு ஏன் கண்டுகொள்வதில்லை? - உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


தமிழக காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அண்மைய காலமாக அதிகரித்துள்ளதாகவும், இதனை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு காவலர் குடியிருப்பு ஒன்றில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து காவல்துறையைச் சேர்ந்த மாணிக்கவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உயர்நீதிமன்றம், "கடந்த 2014 ஆம் ஆண்டில் காலி செய்யுமாறு உத்தரவிட்டு, நீதிமன்றம் அதை உறுதி செய்த பின்னர், நடப்பு ஆண்டு தான் இடத்தை காலி செய்திருக்கிறார். அவர் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விளக்கப்படவில்லை.

உயர் அதிகாரிகள் எதிர்பார்த்த அளவு ஒழுக்கத்தை பேணாதபோது காவல் துறைக்கு எதிராக பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை எனில், நன்மதிப்பை இழக்க நேரிடும். 

மக்கள் மத்தியில் காவல்துறை மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளது. பல குற்றச்சாட்டுகள் பொது வெளியில் கிடைத்தாலும், அரசாங்கத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகமாக உள்ளது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாது. இது சீரழிவுக்கும் மற்றும் அரசியலமைப்பு மீறலுக்கும் வழிவகுக்கும். காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அரசு அறிக்கை அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூன் 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police MadrasHighCourt


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->