மே-6ல் பாமக, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் கூட்டுக் கூட்டம்.. பாமக தலைமை அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் கூட்டுக் கூட்டம் வரும் மே 6ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் - மாவட்ட தலைவர்களின் கூட்டுக் கூட்டம் வரும் மே 6-ம் நாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அம்மா திருமண அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.

பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா அருள்மொழி, பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் இரு அமைப்புகளின் மாநில அளவிலான நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். 

முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில் பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Vanniyar Sangam district secretaries meeting on May6


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->