''தேர்தல் முடிவுகள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்'' - பிரதமர் நெகிழ்ச்சி பதிவு.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி, கோயம்புத்தூரில் ரோடு ஷோ மேற்கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். 

சாய்பாபா கோவில் முன் இருந்து அவர் வாகன பேரணியை தொடங்கினார். இந்த பேரணியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

பொதுமக்களின் ஆதரவால் மோடி உற்சாகமடைந்ததால் மோடியின் வாகனம் மெதுவாக சென்றது. சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ மேற்கொண்டார். 

இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தளத்தில் கோவை சுற்றுப்பயணம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

கோயம்புத்தூர் மக்கள் என் மனதை வென்று விட்டார்கள். இந்த ரோடு ஷோ பல ஆண்டுகள் என் நினைவில் நிற்கும். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டது சிறப்பு. 

இந்த வாழ்த்துகள் பெரிதும் போற்றக்கூடியவை. தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தவுள்ளது. 

எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகிறது. இனி தி.மு.கவை ஆதரிக்கும் மனநிலையில் பொதுமக்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi tweet


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->