திமுக ஆட்சி தான் கிராமங்களின் பொற்காலம் - சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பொன்னிமாந்துறையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் துணை சுகாதார நிலையம் அமைத்துக் கொடுக்க ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் விடுக்கபட்ட வேண்டுகோளை ஏற்று ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் திறப்பு விழா பொன்னிமாந்துறையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலம்தான் கிராம மக்களின் பொற்காலமாக உள்ளது. 

கலைஞர் முதல்வராக இருந்தபோது ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமமான பெரும்பாறையில் துணை சுகாதார நிலையம் அமைத்து கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டதால் கிராம மக்கள் எளிதில் மருத்துவ வசதி பெரும் நிலைமை ஏற்பட்டது. திராவிட மாடல் ஆட்சியில், தலைவர் ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் கிராமங்கள் தோறும் துணை சுகாதார நிலைய கட்டிக்கொடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுமக்களும், கர்ப்பிணி பெண்களும் எளிதில் மருத்துவ வசதி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது" என பெருமிதத்துடன் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

periyasamy said DMK rule was golden days of villages


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->