ஓ பன்னீர் செல்வத்திற்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி.. பொருளாளர் பதவியை தட்டித் தூக்க போகும் முக்கிய நிர்வாகி.? - Seithipunal
Seithipunal


அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 75 தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர். இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அறிவிப்புகள் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக நிர்வாகிகளுடன் தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், தேனியிலிருந்து அவசரமாக ஓ பன்னீர்செல்வம் சென்னை கிளம்பினார். நாளை சென்னை வருவதாக திட்டமிட்டிருந்த நிலையில், இன்று விமானம் மூலம் சென்னை வருகிறார். 

இந்நிலையில், அதிமுக பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்கி விட்டு, புதிய பொருளாளராக கேபி முனுசாமியை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. மேலும் ஜூன் 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops post for may be kp munusamy


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->