பத்திரிகைத் துறையில் நீண்ட அனுபவம் பெற்ற டி.குமார் தற்கொலை.. ஓ.பி.எஸ். இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


பத்திரிகைத் துறையில் நீண்ட அனுபவம் பெற்ற, யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலகத் தலைமை நிர்வாகியும், மூத்த புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றிய டி.குமார் காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டி.குமார் மறைவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரபல செய்தி நிறுவனமான யு.என்.ஐ. நிறுவனத்தில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக புகைப்பட கலைஞராகப் பணியாற்றி தலைமைப் பொறுப்பிற்கு உயர்ந்த திரு. டி. குமார் அவர்கள் மனஉளைச்சல் காரணமாக தன்னுயிரை மாய்த்துக் கொண்டார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அன்னாரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை இறைஞ்சுவதோடு, இதுபோன்ற உயிரை மாய்த்துக் கொள்ளும் செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ops mourning for t kumar death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->