இபிஎஸ் முதல்வராக இருந்ததற்கு நான் தான் காரணம்! ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக அவரை முதலமைச்சராகிய சசிகலாவிற்கு அவர் துரோகம் செய்தார் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "நாமக்கல் கூட்டத்தில் பழனிச்சாமி பேசிய கருத்துக்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அன்று இருந்த சூழ்நிலையில் நான் தர்ம யுத்தத்தை எதற்காக யாருக்காக தொடங்கினேன் என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது இருந்த சூழ்நிலையில் பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார். பழனிச்சாமி முதலமைச்சராக இருந்ததை எதிர்த்து தான் நான் வாக்களித்தேன். 

அதற்கு பின்னார் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் என்னிடம் வந்து டிடிவி தினகரன் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறார். அவர் கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு திமுக மற்றும் உங்களை ஓட்டு சேர்ந்தால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற நிலையில் பதட்டத்தோடு என்னை வந்து சந்தித்தார்கள். அப்பொழுது இருந்த சூழ்நிலையில் இவர்களும் சின்னம்மாவை விட்டு பிரிந்து வந்து விட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் டிடிவி தினகரன் கொண்டு வந்த நம்பிக்கை உள்ள தீர்மானத்திற்கு நான் ஆதரவு தெரிவித்து இருந்தால் அன்றே பழனிச்சாமியின் ஆட்சி கவிழ்ந்திருக்கும். நான் தந்த ஆதரவினால் தான் பழனிச்சாமியின் அரசு 5 வாக்குகளில் காப்பாற்றப்பட்டது என்பது தான் உண்மை. அந்த எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் நான்கரை ஆண்டுகள் அவர் செய்த ஜனநாயக விரோத செயல்களால் என்னை மட்டத்தட்ட வேண்டும் என அவர் எண்ணியதை உங்கள் முன்னால் சொல்ல கடமை பட்டு உள்ளேன். பழனிச்சாமியை முதல்வராகிய சின்னம்மா சசிகலாவுக்கு அவர் துரோகம் செய்தார்." என செய்தியாளர்கள் சந்திப்பில் ஓபிஎஸ் பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ops is reason for EPS continue as Chief Minister


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->