கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே முதலில் வந்த ஓபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


இன்னும் சற்று நேரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமான அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர். 

இதனிடையே, 2,500 பேர் பங்கேற்கும் பொதுக்குழு கூட்டத்தில் சிலர் போலி பாஸ்களுடன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போலி அடையாள அட்டையுடன் வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர். மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அவர்களை வரவேற்பதற்காக  மதுரவாயில் சாலையில் காத்திருக்கின்றன. 

இதனால், வானகரம் - மதுரவாயில் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சிக்கினார்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் மண்டபத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.  கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய போதிலும் முதலில் வந்தடைந்தார் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பி.எஸ்-ஐ வரவேற்று ஆதரவாக அதிமுக தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ops in vanakaram


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->