37,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. தேர்தல் பிரச்சாரத்தில் ஓ.பன்னீர்செல்வம்!! - Seithipunal
Seithipunal


நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல், இந்த மாதம் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்காக அதிமுக மற்றும் திமுக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், அதிமுகவின் 48 வது ஆண்டு துவக்க விழா மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் அரிய குளத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவினர் பலர் கலந்துகொண்டனர். 

அப்போது பேசிய ஓ. பன்னீர்செல்வம், தற்போது நடந்து வரும் அதிமுக ஆட்சியில் 6 லட்சம் பசுமை வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். அதிமுக ஆட்சியில் 1,47,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 37,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும்  ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops election campaign in tirunelveli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->