ஓ.பி.எஸ் மகனுக்கு அதிமுகவில் வழங்கப்பட்ட முக்கிய பதவி!! வெளியான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு!!
ops elected new post
நடந்து முடித்த பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியை தவிர்த்து அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. தேனி தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.
இந்தநிலையில், தேனி தொகுதி எம்.பியாக ரவீந்திரநாத் குமார் பதவியேற்று கொண்டார். இதனையடுத்து அதிமுக மக்களவை குழு தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்தனர்
அதிமுக மக்களவை குழு தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம் தொடர்பாக, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக அறிவிப்பு.