திடீர் பரபரப்பு.. ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கைது.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பதால், அண்ணா பல்கலைக் கழகத்தோடு விழுப்புரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை சேர்ந்த கல்லூரிகளை இணைக்க திமுக அரசு முடிவெடுத்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரிலான இந்த பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக் கழகத்தோடு இணைக்கும் முடிவுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்ப்புகள் வந்தாலும் திமுக அரசு தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

இந்நிலையில், இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக் கழகத்தோடு இணைக்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

இதையடுத்து, சென்னை கலைவாணர் அரங்கம் அருகே சாலையில் அமர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதுமட்டுமில்லாமல் சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்கு பெரும் கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட ஒபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops and admk mlas arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->